2011-10-17 15:44:56

திருத்தந்தை : விசுவாசம் பற்றியத் தெளிவான அறிவைப் பெறுவதற்கு விலைமதிப்பில்லா கருவி கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு


அக்.17,2011. கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வியில் கொடுக்கப்பட்டுள்ள விசுவாசத்தின் அடிப்படைக் கூறுகளை அறிவிக்க வேண்டிய பணியை இந்த விசுவாச ஆண்டு கொண்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
“Porta fidei” என்ற தலைப்பில் Motu proprio அமைப்பில் அப்போஸ்தலிக்கக் கடிதத்தின் மூலம் இந்த விசுவாச ஆண்டு பற்றி விளக்கியுள்ள திருத்தந்தை, கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டதன் 20ம் ஆண்டு அக்டோபரில் நிறைவடைவதால் இந்த விசுவாச ஆண்டு அக்டோபரில் தொடங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தான் பாப்பிறை பணியைத் தொடங்கியது முதற்கொண்டு விசுவாசப் பயணத்தை மீண்டும் கண்டுணர வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இவ்வாண்டை மதிப்பும் பயனும் நிறைந்த விதமாகக் கொண்டாட வேண்டுமென்று சகோதர ஆயர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் கூறியுள்ளார்.
விசுவாசம் பற்றிய அறிவைப் பெறுவதற்கு விசுவாசம் பற்றியத் தெளிவான அறிவைப் பெறுவதற்கு விலைமதிப்பில்லா மற்றும் இன்றியமையாத கருவி கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இவ்வாண்டை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைத் திருப்பீட விசுவாசக் காப்புப் பேராயம் வழங்குமாறு தான் கேட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.