அக்.17,2011. மங்கோலிய அரசுத்தலைவர் Tsakhiagiin Elbergdorjஐ இத்திங்களன்று திருப்பீடத்தில்
சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் திருப்பீடச்
செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக்
மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் மங்கோலிய அரசுத்தலைவர் Elbergdorj. இச்சந்திப்புக்கள்
குறித்து நிருபர் கூட்டத்தில் பேசிய திருப்பீடப் பத்திரிகை அலுவலகம், மங்கோலியாவுக்கும்
திருச்சபைக்கும் இடையேயான உறவு, ஆசியக் கண்டத்தின் நிலைமை, நீதியையும் அமைதியையும் ஊக்குவிப்பதில்
பல்சமய மற்றும் பல கலாச்சாரங்களுக்கிடையேயான உரையாடலின் முக்கியத்துவம் போன்றவை இடம்
பெற்றதாகக் கூறியது. இரஷ்யாவையும் சீனாவையும் எல்லைகளாகக் கொண்ட மத்திய ஆசிய நாடாகிய
மங்கோலியாவில் 6 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.