அக்.17,2011. கடந்த பத்தாண்டுகளின் மிகப்பெரும் மனித குல நெருக்கடியான ஆஃப்ரிக்க கொம்பு
நாடுகளின் பசிக்கொடுமைகள் குறித்து சர்வதேச நாடுகள் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும்
என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 'உணவுப்பொருட்களின் விலை: நெருக்கடியிலிருந்து
நிலையான தன்மை நோக்கி' என்ற தலைப்பில் இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் முப்பதாவது உலக உணவு
தினத்தை முன்னிட்டு உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்திற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை,
இன்றைய பொருளாதார நெருக்கடிகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள், தங்கள் உணவுப்பொருட்களைப்
பெறுவதற்கான வழிகளைச் சர்வதேச சமுதாயம் உருவாக்கிக் கொடுப்பது குறித்து சிந்திக்க வேண்டும்
என அதில் விண்ணப்பித்துள்ளார். மனிதர்கள் வாழ்வதற்கான உரிமை மற்றும் மாண்பு மதிக்கப்படுவது
என்பது வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவையாகும் என்பதையும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்
திருத்தந்தை.