2011-10-15 14:54:12

வட இந்தியாவில் மூளைக் காய்ச்சலுக்கு 400 பேர் பலி


அக்.15, 2011. என்சிஃபாலிட்டிஸ் (Encephalitis) எனப்படும் ஒருவகை மூளைக்காய்ச்சல் நோய் பரவியதால், வட இந்தியாவில் பெரும்பாலும் சிறார்கள் உட்பட 400 பேர் உயிரிழந்துள்ளதாக நலவாழ்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூளை வீக்கமடையும் இந்த வகைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2,400 பேர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடக்க காலத்தில் இந்த நோய், கொசு மூலம் பரவியதாகக் கருதப்பட்டாலும், தற்போது மாசடைந்த நீரினாலேயே இது அதிகம் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த 420 பேரில் 335 பேர் சிறார்களாவர்.








All the contents on this site are copyrighted ©.