2011-10-15 14:49:16

புதிய நற்செய்தி அறிவிப்பாளர்க்குத் திருத்தந்தை திருப்பலி


அக்.15,2011. இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் புதிய நற்செய்தி அறிவிப்பாளர்க்கெனத் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
“புதிய நற்செய்தி அறிவிப்புக்கான புதிய நற்செய்தி அறிவிப்பாளர்கள் - கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது (தி.தூதர். 12,24)” என்ற தலைப்பில் வத்திக்கானில் இச்சனிக்கிழமை இரண்டு நாள் மாநாடு துவங்கியது.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Rino Fisichella உரையுடன் தொடங்கிய இம்மாநாட்டில், புதிய நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு யார் பொறுப்பானவர்கள் என்பது வலியுறுத்தப்பட்டது.
ஆன்மீகமும் அகவாழ்வும், மேற்கும் அது கிறிஸ்துவிடம் எழுப்பும் கேள்வியும், அறிவியலும் விசுவாசமும் - ஓர் ஆழமான உரையாடல், இலத்தீன் அமெரிக்காவில் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி அனுபவம், போன்ற தலைப்புக்களில் சொற்பொழிவுகள் இடம் பெற்று கருத்துக்கள் பரிமாறப்பட்டன.







All the contents on this site are copyrighted ©.