அக்.15,2011. மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவில் அடுத்த மாதத்தில் தேர்தல்கள் இடம்பெறவுள்ள
வேளை அந்நாட்டில் அமைதியான சூழல் காணப்படவில்லை என்று அந்நாட்டு Matagalpa ஆயர் Rolando
Álvarez Lagos கூறினார். நாட்டின் தற்போதைய அமைதியற்ற சூழல் குறித்துப் பொதுப்படையாகப்
பேசுவதால் தனக்கும் இரண்டு அருட்பணியாளர்களுக்கும் மரண அச்சுறுத்தல் கிடைத்திருப்பதாகவும்
ஆயர் அல்வாரெஸ் லாகோஸ் கூறினார். தான் மௌனமாக இருக்காவிட்டால் தான் மௌனமாக்கப்படுவதாகத்
தொலைபேசியில் மிரட்டப்பட்டதாகவும் ஆயர் தெரிவித்தார். நற்செய்தியின் ஒளியில் மக்களின்
மனச்சாட்சிகளை ஒளிர்விக்கும் பணியைத் தாங்கள் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.