கர்தினால் இரஞ்சித் : சிறார் கல்வியில் கவனம் செலுத்த அழைப்பு
அக்.14,2011. கடவுள் தமது விலைமதிப்பில்லாக் கொடைகளாகிய சிறாரை நமது கண்காணிப்பில் வைத்துள்ளார்,
அவர்களின் ஆளுமையில் முழுக்கவனம் செலுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்று கொழும்பு
பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் கூறினார். கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் கல்விப்
பணிக்குழு நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய கர்தினால் இரஞ்சித், ஆசிரியப் பணி
மதிப்புமிக்கது மற்றும் மேன்மையானது என்று கூறினார். ஒவ்வோர் ஆசிரியரும் செப மனிதனாக
இருந்து, அந்தச் செபத்தில் கிடைக்கும் சக்தி மூலம் சிறார் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும்
சவால்களுக்கு உதவ வலிமை பெறுகிறார்கள் என்றும் இலங்கை கர்தினால் கூறினார்.