2011-10-14 16:18:43

அரபு நாடுகளில் மக்கள் எழுச்சியினால் சுமார் 55 பில்லியன் டாலர் இழப்பு


அக்.14,2011. இவ்வாண்டில் வட ஆப்ரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் இடம் பெற்ற பொது மக்கள் எழுச்சியினால் 5,000 கோடி டாலருக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
எகிப்து, சிரியா, லிபியா, டுனிசியா, பஹ்ரைன், ஏமன் ஆகிய நாடுகள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் இவ்வறிக்கை, அவற்றின் உள்நாட்டு உற்பத்தியில் 2,056 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியது.







All the contents on this site are copyrighted ©.