அக்.13,2011. மியான்மாரில் சிறையில் இருப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் நடவடிக்கையின்
ஒரு பகுதியாக, அரசியல் கைதிகள் உட்பட பலரை விடுவிக்கும் நடவடிக்கையை அந்நாட்டின் அதிகாரிகள்
ஆரம்பித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நூற்று ஐம்பதுக்கும் மேலானவர்கள்
விடுவிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் இராணுவத்தின் பின்புலத்தில்
இயங்கும் மியான்மார் அரசு, சீர்திருத்தங்களை நோக்கி முன்னேறும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக
அண்மைய காலச் செயற்பாடுகள் இருக்கின்றன என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. அரசால்
விடுவிக்கப்பட்டுள்ளவர்களில் பல புத்த பிக்குகளும், ஒரு பிரபல நகைச்சுவை நடிகரும் அடங்குவர்
என்று எண்ணப்படுகிறது. இவர்கள் அந்நாட்டில் நர்கீஸ் சூறாவளி தாக்கிய பிறகு, முன்னாள்
இராணுவ அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டிருந்தனர். அரசால்
விடுவிக்கப்படுபவர்கள் யார் என்பதை கூர்ந்து அராய்ந்த பிறகே குடியரசு ஆதரவுவாதிகள், மனித
உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் அறிஞர்கள் தமது கருத்துக்களை வெளியிடுவார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது