2011-10-13 15:45:25

சூடான் ஆயர் பேரவையின் முயற்சியாக நடைபெறும் ஒப்புரவு கருத்தரங்கு


அக்.13,2011. தெற்கு சூடான் தனி நாடாகப் பிரிந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள இவ்வேளையில், அந்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு கிறிஸ்துவர்களின் பங்களிப்பு ஆகியவைகளைக் கலந்து பேசும் ஒரு கருத்தரங்கு அந்நாட்டில் இவ்வியாழன் முதல் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது.
"பல்வேறு இனம், மொழி மற்றும் மக்களைக் கொண்ட திருச்சபை - கடந்த காலத்திலிருந்து எதிர் காலத்திற்கு" என்ற மையக் கருத்துடன் ஆரம்பமாகியுள்ள இந்தக் கருத்தரங்கில் ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பல்வேறு துறைகளில் பணி புரியும் பொது நிலையினர் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Khartoum உயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Gabriel Zubeir மற்றும் Juba மறைமாவட்டத்தின் ஆயர் Pauline Lukudu Loro ஆகியோர் கலந்து கொள்ளும் இந்தக் கருத்தரங்கு, சூடான் ஆயர் பேரவையின் முயற்சி என்றும், இக்கருத்தரங்கில் ஒப்புரவு, அமைதி, நாட்டின் ஒற்றுமை ஆகியவைகளே முக்கிய கருத்துக்களாகப் பேசப்படும் என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.