2011-10-11 15:07:38

கென்யாவில் கத்தோலிக்க குரு கொலை செய்யப்பட்டுள்ளார்


அக் 11, 2011. கென்யாவின் நைரோபியில் தன் உறவினர் ஒருவரை சந்திக்கச் சென்ற வழியில் திருடர்களால் வழிமறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் அந்நாட்டு குரு ஒருவர்.
இத்திங்கள் இரவு கொலைச் செய்யப்பட்டுள்ள குரு James Kiser Awuor, கென்யாவின் Kisumu உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Zacchaeus Okothன் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையிலேயே உரோம் நகரில் தன் மேற்படிப்பை முடித்து தாயகம் திரும்பிய குரு James, நைரோபி சேரிப்பகுதிகளின் வன்முறை குறித்து அறியாதிருந்திருக்கலாம் என்கிறது மிஸ்னா செய்தி நிறுவனம்.








All the contents on this site are copyrighted ©.