ஒழுக்க ரீதி அமைப்பு முறைகளை மனித சுதந்திரத்திற்கு எதிரானவை அல்ல
அக் 11, 2011. ஒழுக்க ரீதி அமைப்பு முறைகள் மனித சுதந்திரத்திற்கு எதிரானவை என்ற கண்ணோட்டமே
ஸ்காட்லாந்தின் ஒரே பாலின திருமண ஆதரவுக்கான மூல காரணமாக உள்ளது என குற்றம் சாட்டினார்
அந்நாட்டு பேராயர் மாரியோ கோந்தி. திருமணத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தை ஸ்காட்லாந்தின்
அனைத்து பங்குதளங்களும் மேற்கொண்டு வருவது குறித்து எடுத்துரைத்த Glasgow பேராயர், தவறான
பாலின நடவடிக்கை தொடர்புடைய செயல்பாடுகளில் இன்றைய சமூகத்தின் சகிப்புத்தனமைகள் அதிகரித்து
வருவதை குறித்து தன் கவலையையும் வெளியிட்டார். ஒழுக்க ரீதி கொள்கைகளை மனித சுதந்திரத்திற்கு
எதிரானவைகளாகவும், தவறான நடவடிக்கைகளை மனித உரிமையின் ஒரு பகுதியாகவும் நோக்கும் இன்றைய
போக்கு குறித்த கேள்விகளையும் எழுப்பினார் பேராயர் கோந்தி. ஒரே பாலின திருமணங்களை
அனுமதிப்பது குறித்து ஸ்காட்லாந்து அரசு ஆலோசனைகளை நடத்தி வருவதையொட்டி தன் கருத்துக்களை
இவ்வாறு வெளியிட்டுள்ளார் பேராயர்.