கந்தமால் பகுதியில் கத்தோலிக்க கோவில் கட்டுமிடத்தில் காவிக்கொடி ஒன்றை நாட்டியுள்ளனர்
சிலர்
அக்.10,2011. ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தின் கிறிஸ்தவக் குடியிருப்பு ஒன்றில் கத்தோலிக்க
கோவில் கட்டப்பட்டு வந்த பகுதியில் அத்து மீறி காவிக்கொடி ஒன்றை நாட்டியுள்ளனர் இந்து
அடிப்படைவாதிகள் சிலர். 2008ம் ஆண்டின் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலின்போது முற்றிலுமாகத்
தரைமட்டமாக்கப்பட்ட Bakingia கிராமக் கத்தோலிக்க கோவிலுக்கான இழப்பீட்டுத்தொகையை அரசிடமிருந்து
பெற்று மீண்டும் அதைக் கட்டுவதற்கான முயற்சியில் தடைகளை விதித்துள்ளது இந்து தீவிரவாத
குழு ஒன்று. இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகளால் அப்பகுதியின் கிறிஸ்தவர்கள் இன்னும்
அச்சத்துடனேயே வாழ்வதாக அறிவித்தார் அப்பகுதி குரு சந்தோஷ் டிகால்.