ஒவ்வொரு கிறிஸ்தவரும் அடிப்படையில் ஒரு மறைபோதகரே - பேராயர் Orani Joao
அக்.10,2011. ஒவ்வொரு கிறிஸ்தவரும் அடிப்படையில் ஒரு மறைபோதகரே என்கிறார் பிரசில் நாட்டின்
ரியோ தெ ஜெனய்ரோ பேராயர் Orani Joao. திருச்சபை, அக்டோபர் மாதத்தில், மறைப்பணிகள்
குறித்தும் செபமாலை குறித்தும் அதிகம் அதிகமாக சிந்திக்கிறது என்ற பேராயர், இவ்விரண்டும்
ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை, ஏனெனில் நற்செய்தி அறிவிப்பிற்கான நம் கடமையில் செபம்
எனும் ஊக்க சக்தி இன்றியமையாதது என்றார். திருச்சபையின் அடிப்படை மறைப்பணி என்பது
கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதாகும், அந்த நற்செய்தி ஒவ்வொருவரின் வாழ்விலும் வெளிப்படவேண்டும்
என்றார் அவர். மறைப்பணி என்றால் ஏதாவது ஒரு துறவு சபையில் சேர்ந்து செய்யப்படவேண்டிய
பணி என பலரும் எண்ணும் வேளை, குடும்பங்களில் இருந்தும் மறைப்பணியாற்ற முடியும் என்றார்
பேராயர் Joao. தான் சார்ந்திருந்த துறவு மடத்தை விட்டு வெளியே வராமலேயே மிகப்பெரும்
மறைப்பணியாளராக விளங்கிய புனித குழந்தை திரேசாவை இதற்கு எடுத்துக்காட்டாய் முன்வைத்தார்
பேராயர்.