2011-10-08 14:34:10

பூர்வீக இன மக்களின் வாழ்வுப் போராட்டத்திற்கு ஒற்றுமை தேவை


அக்.08,2011. இந்தியாவின் வளர்ச்சி நடவடிக்கைகள் பூர்வீக இன மக்களின் வாழ்வுக்கும் சொத்துக்களுக்கும் ஆபத்தாக இருக்கின்றன என்று ஒரு கருத்தரங்கில் கூறப்பட்டது.
இந்தியாவின் 27 மாநிலங்களில் 9 மாநிலங்களைச் சேர்ந்த பூர்வீக இனக் குழுக்களின் சுமார் 250 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் கூட்டத்தில் தங்களின் தனித்துவத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சுரண்டல் சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.
இந்தத் தங்களது போராட்டத்திற்கு ஒற்றுமை தேவை என்றும் கூறப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.