அக்.07,2011. உலகின் மிகப்பெரிய அன்னைமரியா பவனி பிரேசில் நாட்டு Belém என்ற நகரில் இந்த
அக்டோபர் 9ம் தேதியன்று நடைபெறவிருக்கிறது. இஞ்ஞாயிறன்று நடைபெறும் இந்த மாதாப் பவனிக்குத்
தயாரிப்பாக, பெலெம் உயர்மறைமாவட்டத்தின் பல பங்குகளும் பொதுநிலை கத்தோலிக்க இயக்கங்களும்
மேய்ப்புப்பணி மையங்களும் இப்புதனன்று 48 மணிநேர திருநற்கருணை ஆராதனை பக்தி முயற்சியைத்
தொடங்கியுள்ளன. பெலெம் பேராலயத்திலிருந்து தொடங்கும் இப்பவனி இரண்டு மைல்கள் சென்று
நாசரேத்தூர் மரியா திருத்தலம் சென்றடையும். இதில் பிரேசில் நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும்
மக்கள் கலந்து கொள்வார்கள். 1792ம் ஆண்டு வத்திக்கான் அனுமதியுடன் தொடங்கப்பட்ட இந்தப்
பவனி பற்றி அறிக்கை வெளியிட்ட பிரேசில் ஆயர்கள், இது ஒரு குடும்ப விழா, இது ஒரு சகோதரத்துவ
விழா என்று குறிப்பிட்டுள்ளனர்.