2011-10-01 15:08:15

திருவழிபாட்டுப் பேராயம், திருவழிபாடு குறித்த விவகாரங்களில் அதிகக் கவனம் செலுத்துவதற்கு உதவும் நோக்கத்தில் திருத்தந்தை புதிய நடவடிக்கை


அக்.01,2011. திருப்பீடத் திருவழிபாடு மற்றும் திருவருட்சாதனப் பேராயம், திருவழிபாடு குறித்த விவகாரங்களில் அதிகக் கவனம் செலுத்துவதற்கு உதவும் நோக்கத்தில் அப்பேராயத்தின் சில பொறுப்புக்களை நீக்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
"motu proprio" அதாவது அவரின் சொந்த முயற்சியின் பேரில் என்று பொருள்படும் அப்போஸ்தலிக்க கடிதத்தின் வழியாக இப்பேராயத்தின் சில பொறுப்புக்களை நீக்கியுள்ள திருத்தந்தை, வத்திக்கானின் உச்ச நீதிமன்றமாகிய உரோமன் ரோட்டாவில் புதிய அலுவலகம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
குருத்துவத் திருநிலைப்பாட்டிலிருந்து விலக்கு வழங்குதல், முறையான திருமணத் தம்பதியராக வாழாதத் திருமணங்களை இரத்து செய்தல் ஆகிய நடவடிக்கைகள் இப்புதிய அலுவலகத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
"Quaerit Semper" என்ற தலைப்பிலான இந்த அப்போஸ்தலிக்க ஆவணத்தின் மூலம் இப்பணியை அளித்துள்ள திருத்தந்தை, இவற்றைத் திருவழிபாட்டுப் பேராயத்திலிருந்து நீக்கியுள்ளதால் அப்பேராயம் திருவழிபாடு குறித்த விவகாரங்களில் அதிகக் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய விதிமுறைகள் இச்சனிக்கிழமையிலிருந்து அமலுக்கு வருகின்றன.








All the contents on this site are copyrighted ©.