செப்.29,2011. Rosh Hashanah என்ற யூதர்களின் 5772ம் புத்தாண்டு பெருவிழாக் கொண்டாட்டங்கள்
இவ்வியாழன், இவ்வெள்ளி தினங்களில் நடைபெறுவதையொட்டி யூதமதத்தினருக்குத் தனது புத்தாண்டு
வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். Rosh Ha-Shanah
5772, Yom Kippur, Sukkot ஆகிய யூதமத விழாக்களையொட்டி உரோம் யூதமதத் தலைமைக்குரு ராபி
ரிக்கார்தோ தி செஞ்ஞிக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துத் தந்தியில், உண்மைக்கு
உறுதியான சாட்சியங்கள் தேவைப்படும் இவ்வுலகில் நீதியையும் அமைதியையும் ஊக்குவிப்பதற்கு
நல்ல மனைத இப்பெரு விழா அனைவரிலும் கொண்டு வரட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இறைவன்,
எபிரேய சமூகத்தைப் பாதுகாக்கவும் உரோம் மற்றும் உலகின் பிற பகுதிகளிலுள்ள எபிரேயர்களுக்கும்
நமக்கும் இடையே நல்ல நட்புறவு வளரவும் வேண்டுமென்ற ஆவலையும் இச்செய்தியில் வெளியிட்டுள்ளார்
திருத்தந்தை. இந்தப் புத்தாண்டு பெருவிழாவுக்கு 8 நாள்களுக்குப் பின்னர் Yom Kippur
என்ற பாவக்கழுவாய் நிகழ்வும், இதற்கு ஐந்து நாள்களுக்குப் பின்னர் Sukkot என்ற கூடாரப்
பெருவிழாவும் சிறப்பிக்கப்படுகின்றன.