2012ம் ஆண்டு உலக சமூகத் தொடர்பு நாளுக்கானக் கருப்பொருள் அறிவிப்பு
செப்.29,2011. “மௌனமும் இறைவார்த்தையும் நற்செய்தி அறிவிப்புக்கான பாதை” என்பதை, 2012ம்
ஆண்டு மே 20ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக சமூகத் தொடர்பு நாளுக்கானத் தலைப்பாகத் திருத்தந்தை
தேர்ந்தெடுத்துள்ளார் என்று திருப்பீட சமூகத் தொடர்பு அவை அறிவித்தது. தேர்ந்து தெளிதல்
மற்றும் சிந்தனை செய்யும் பழக்கத்திற்கு, மௌனம் எப்போதும் உதவுவதால் இது இறைவார்த்தையை
ஏற்பதற்கும் உதவுகின்றது என்று அவ்வவை கூறியது. எழுத்தாளர்களின் பாதுகாவலரான தூய
பிரான்சிஸ் தெ சேல்ஸ் விழாவான சனவரி 24ம் தேதியன்று இவ்வுலக நாளுக்கானத் திருத்தந்தையின்
செய்தி ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படுகின்றது. பெந்தெகோஸ்தே விழாவுக்கு முந்திய
ஞாயிறன்று உலக சமூகத் தொடர்பு நாள் திருச்சபையில் வழக்கமாகக் கொண்டாடப்படுகின்றது.