செப் 27, 2011. ஹாங்காங்கில் தேசியவாதக் கல்விக்கென தனி வகுப்புகளை புகுத்தத் திட்டமிட்டிருக்கும்
சைன அரசின் நோக்கம் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் அப்பகுதி கர்தினால்
ஜோசப் சென் சே சியூன். தீவிர தேசியவாதத்தை முன்னிறுத்தி மாணவர்களை மூளைச்சலவைச் செய்ய
சைன அரசு முயன்று வருவதாக உரைத்த கர்தினால், அரசின் புதிய கல்வித்திட்டத்தின் நோக்கம்
குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். கம்யூனிச அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வலியுறுத்தும்
நோக்கம் கொண்ட இக்கல்வித் திட்டத்தை ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்க்க வேண்டும் எனவும்
விண்ணப்பித்துள்ளார் கர்தினால் ஜோசப் சென் சே சியூன்.