கர்நாடக கிறிஸ்தவ வளர்ச்சி அமைப்புக்கு அடுத்த ஆண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செப்.26,2011. கர்நாடக கிறிஸ்தவ வளர்ச்சி அமைப்புக்கு அடுத்த ஆண்டில் 100 கோடி ரூபாய்
ஒதுக்குவதாக கர்நாடக முதலமைச்சர் டி.வி.சதானந்தா கவுடா அறிவித்தார். கொங்கனி கத்தோலிக்க
கழக கூட்டமைப்பின் தலைவர் வலேரியன் பெர்னான்டஸ் தலைமையில் சென்ற பிரதிநிதிகள் குழுவிடம்
பேசிய டி.வி.சதானந்தா கவுடா, தனக்கு முந்தைய முதல்வர் 50 கோடி ரூபாய் ஒதுக்கினார், அந்த
நிதி ஒதுக்கீட்டைத் தான் அடுத்த ஆண்டில் இரண்டு மடங்காக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறினார். சிறுபான்மை
கிறிஸ்தவச் சமூகத்திலிருந்து ஒருவரை அரசில் நியமிக்குமாறு பெர்னான்டஸ் முன்வைத்த பரிந்துரைக்குப்
பதிலளித்த கர்நாடக முதலமைச்சர், விரைவில் திறமையான ஒருவரை நியமனம் செய்வதற்குத் திட்டமிட்டு
வருவதாகத் தெரிவித்தார். 2008ல், மங்களூர், உடுப்பி, மற்றும் பிற இடங்களில் கிறிஸ்தவ
ஆலயங்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து குற்றமற்ற கிறிஸ்தவ
இளைஞர்க்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை இரத்து செய்யுமாறு விண்ணப்பித்த
போது, அரசு ஏற்கனவே இதில் நடவடிக்கையைத் தொடங்கியிருப்பதாகவும் அரசு அவசியமான நவடிக்கைகளை
எடுத்து வருவதாகவும் டி.வி.சதானந்தா கவுடா கூறினார்