அன்னைமரியா, நாம் நம் வாழ்க்கையின் நோக்கம் பற்றிப் புரிந்து கொள்ள உதவுகிறார் மற்றும்
உண்மையான மகிழ்ச்சியின் பாதையைக் காட்டுகிறார். உங்களது உண்மையான மகிழ்ச்சியைத் தவிர
வேறு எதையும் ஒருபோதும் விரும்பாதவரும் நன்மையானது அனைத்தின் ஊற்றுமாகிய கடவுள், அவரது
விருப்பத்திற்கேற்ப நாம் நடக்க வேண்டும் என்பதை நம்மிடம் கேட்பதற்கு உரிமையைக் கொண்டுள்ளார்
என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று அன்னைமரியா நம்மிடம் சொல்வது போல் இருக்கின்றது.
இயேசு தனது தாய் கேட்பதை ஒருபொழுதும் மறுக்கமாட்டார் என்ற தன்னிச்சையான உறுதிப்பாட்டில்
வரலாறு முழுவதும் கிறிஸ்தவர்கள் அன்னைமரியாவிடம் செல்கின்றனர். மரியா நம் தாய் என்ற அசைக்கமுடியாத
நம்பிக்கையைக் கொண்டுள்ளோம். பெரும் துயரங்களை அனுபவித்த அந்தத் தாய், நமது வேதனைகளையும்
உணர்வார். நமது கிறிஸ்தவ அழைப்பை வாழ்வதற்கு உதவுகிறார். கடவுள் எங்கே இருக்கிறாரோ அங்கே
எதிர்காலம் இருக்கிறது. உண்மையில், கடவுளின் அன்பு நம் வாழ்வு முழுவதையும் ஆட்கொள்ள அனுமதித்தால்
விண்ணகம் நமக்குத் திறந்திருக்கும்.