2011-09-22 17:25:42

ஏழைகளுக்கு உதவும் பொருட்டு 16 இலட்சம் பவுண்டுகளை வழங்கியுள்ளது இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் உயர்மறைமாவட்டம்.


செப் 22, 2011. இலண்டனில் வாழும் ஏழைமக்களின் தேவைகளை நிறைவேற்ற உதவும் பொருட்டு 16 இலட்சம் பவுண்டுகளை வழங்கியுள்ளது இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் உயர்மறைமாவட்டம்.
ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், தெருவில் வாழ்வோர் என பல்வேறுச் சூழல்களில் துன்பங்களை அனுபவிப்போருக்கு உதவுவதற்கென 2007ம் ஆண்டு முதல் இந்த மறைமாவட்டத்தால் வழங்கப்பட்டுவரும் இத்தொகையால் பலன் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளுக்கானப் பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி, எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சிகிச்சை, முதியோருக்கான பணிகள், அகதிகளிடையேயான பணிகள், வேலைவாய்ப்புக் கல்வி போன்றவைகளுக்கும் இவ்வுதவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.







All the contents on this site are copyrighted ©.