இலங்கைக்குத் தண்டனை விதிக்குமாறு 17 அரசு சார்பற்ற நிறுவனங்கள் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை
செப் 22, 2011. இலங்கை அரசாங்கத்திற்கும் படைவீரர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட
வேண்டுமென 17 அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் ஆணையர் நவநீதம்பிள்ளையிடம்
கோரிக்கை விடுத்துள்ளன. போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத்
தெரிவித்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரகசியமான முறையில் அவசரமாக இந்தக்
கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது