வெள்ளிக்கிழமைகளில் புலால் உண்பதைத் தவிர்க்கும் பழக்கம் இங்கிலாந்து மற்றும் வேல்சில்
மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது
செப்.21,2011. வெள்ளிக்கிழமைகளில் புலால் உண்பதைத் தவிர்க்கும் பழக்கம் இங்கிலாந்து மற்றும்
வேல்ஸ் கத்தோலிக்கத் திருச்சபையில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த
நடைமுறைப் பழக்கத்தை வரவேற்றுப் பேசிய, மூன்று பிள்ளைகளுக்குத் தாயான மார்கிரேட், சில
அடிப்படையான நல்ல கத்தோலிக்கப் பழக்கவழக்கங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும்
நடைமுறைக்கு வந்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றார். திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
பிரிட்டனுக்குத் திருப்பயணம் மேற்கொண்டதன் ஓராண்டு நிறைவு நாளான செப்டம்பர் 16ம் தேதி
இப்பழக்கம் நடைமுறைக்கு வந்தது.