2011-09-21 15:35:08

தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் 1,54,000 பேர்


செப்.21,2011. தமிழகத்தில் ஒரு இலட்சத்து 54 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த விடயத்தில், இந்தியாவிலேயே ஆந்திரா முதலிடம் வகிக்கிறது எனவும் இந்திய தொழிற் கூட்டமைப்பின் சார்பில், சென்னையில் நடைபெற்ற எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய தேசிய அளவிலான கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் பேசிய தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் செயல் இயக்குனர் பழனிக்குமார், எய்ட்ஸ் நோய்க் குறித்த விழிப்புணர்வு, மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்று கூறினார்.
தமிழகத்தில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில்தான் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றுரைத்த பழனிக்குமார், தேசிய அளவில் அமைப்பு சாரா தொழிலாளர்களாக, 40 கோடிப் பேர் உள்ளனர். இவர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் குறிக்கோள் என்றும் கூறினார்







All the contents on this site are copyrighted ©.