வாழ்வு மற்றும் குடும்பத்திற்கு எதிரானச் சட்டங்களைப் புறக்கணிக்க சிலே ஆயர் வலியுறுத்தல்
செப்.20,2011. கருக்கலைப்பை அல்லது குடும்பத்தைப் பலவீனப்படுத்த அனுமதிக்கும் சட்டங்களைப்
புறக்கணிக்குமாறு சிலே நாட்டு வால்பரைசோ ஆயர் கொன்சாலோ துவார்த்தே கார்சியா அந்நாட்டுக்
கிறிஸ்தவர்களைக் கேட்டுக் கொண்டார். குடும்பங்கள் நலிவடைவது, சிலே சமுதாயத்தை மிகவும்
பலவீனப்படுத்தும் கூறுகளில் ஒன்றாக இருந்து வருகிறது என்றுரைத்த ஆயர் துவார்த்தே கார்சியா,
இதில் திருச்சபை முனைப்பாக நின்று செயலாற்றுவதற்குத் தார்மீகக் கடமையைக் கொண்டுள்ளது
என்றார். சிலே மக்கள் கருக்கலைப்புக்கு ஆதரவானச் சட்டங்களைப் புறக்கணிக்குமாறும் ஆயர்
வலியுறுத்தினார்.