ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட இலக்குகளை அடைவது கடினம்
செப்.20,2011. வளரும் நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறாரின் இறப்பு அதிகமாக இருப்பதாகவும்
137 வளரும் நாடுகளில் ஒன்பது மட்டுமே பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலவாழ்வை மேம்படுத்தும்
இலக்கை அடைந்துள்ளதுள்ளன எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். த லான்செட் மருத்துவப்
பத்தரிகை வெளியிட்ட செய்தியில், 2015க்குள் இந்த வயதுச் சிறாரின் இறப்பைக் குறைப்பதற்கான
இலக்கை ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதியில் எந்த நாடும் அடையாது என்று கூறப்பட்டுள்ளது.
சிறாரின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் கடந்த பத்தாண்டுகளில் சீனா, ருவாண்டா, போஸ்ட்வானா
ஆகிய நாடுகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு பாராட்டைப் பெற்றுள்ளன என்றும் அவ்வாய்வாளர்கள்
கூறுகின்றனர்.