பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை ஒழிப்பதற்கு ஐ.நா.நிபுணர் அழைப்பு
செப்.17,2011. உடல்நலத்திற்குத் தீமை வருவிக்கக்கூடிய உணவுப் பொருட்களை ஒழிப்பதற்கு உலகத்
தலைவர்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா.மனித உரிமைகள் வல்லுனர் ஒருவர் கேட்டுக்
கொண்டார். இத்தகைய உணவு வகைகளால் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 30 இலட்சம் வயது வந்தோர்
இறக்கின்றனர் என்று எச்சரிக்கும் Olivier De Schutter, உலகத் தலைவர்கள் உணவு உற்பத்தித்
தொழிற்சாலைகளின் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்கக் கூடாது என்று கேட்டுள்ளார். புற்றுநோய்,
நீரழிவு நோய், இதய நோய்கள், நுரையீரல் நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்கள் பதப்படுத்தப்பட்ட
உணவுகளைச் சாப்பிடுவதால் ஏற்படுகின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டார். உலக நலவாழ்வு
நிறுவனத்தின் கணிப்புப்படி, அதிகப்படியான உடல்பருமனால் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 28
இலட்சம் வயது வந்தோர் இறக்கின்றனர். இவர்களில் 44 விழுக்காட்டினர் நீரழிவு நோயால் இறக்கின்றனர்.