சிறுபான்மை மதத்தவர்க்கெதிராய்க் காணப்படும் ஒருதலைச்சார்பு போக்கு நீக்கப்படுவதற்கு
இந்தியப் பிரதமர் அழைப்பு
செப்.17,2011. இந்தியாவில் சிறுபான்மை மதத்தவர்க்கெதிராய் சட்ட அமைப்பாளர்கள் மத்தியில்
காணப்படும் ஒருதலைச்சார்பு போக்கு நீக்கப்படுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார். நாட்டின் எல்லாப் பிரிவினரின்
நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெறுவதற்குத் தேவையான பலன்தரக்கூடிய கொள்கைகளை அமைப்பதற்கு
இத்தகைய போக்கு எதிரானதாக இருக்கின்றது என்று மேலும் கூறினார் மன்மோகன் சிங். நாட்டின்
காவல்துறை தலைவர்கள் மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் புதுடெல்லியில் கலந்து கொண்ட
தேசியக் கருத்தரங்கில் உரையாற்றிய போது இவ்வழைப்பை முன்வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். இந்து
தீவிர வாதிகள் பிற மதத்தவரைத் தாக்கும் போது உள்ளூர் காவல்துறை அலுவலகர்கள் பல நேரங்களில்
பார்வையாளர்களாக இருக்கின்றனர் என்ற புகார்கள் வருவதையும் அவர் குறிப்பிட்டார்