2011-09-16 15:42:36

பல்சமயத் தலைவர்கள் Dachau வில் அமைதிக்கு அழைப்பு விடுத்தனர்


செப்.16,2011. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வதைப்போர் முகாமாக இயங்கிய ஜெர்மனியின் Dachauவில் கூடிய பல நாடுகளின் பல சமயத் தலைவர்கள், உலகில் போருக்கு எதிராக தங்கள் குரலை உயர்த்தினர்.
போலந்து, ஹங்கேரி, ரொமானியா, உக்ரேய்ன், இத்தாலி, இரஷ்யா போன்ற நாடுகளின் சமயத் தலைவர்கள் மியூனிக்கில் பல்சமய கூட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர் Dachau சென்றனர்.
1933ம் ஆண்டு முதல் 1945 வரை இந்த Dachau முகாமில் சுமார் 2 இலட்சம் பேர் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 42 ஆயிரம் பேர் இறந்து விட்டனர். ஆனால் இவர்களில் யாருமே இயற்கையான மரணத்தை அடையவில்லை என ஊடகங்கள் கூறுகின்றன.
24 நாடுகள் மற்றும் 134 மறைமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் குருக்கள் இந்த 12 ஆண்டுகளில் இங்கு வைக்கப்பட்டிருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.