இப்பூமிப்பந்தைப் பாதுகாக்க நன்னெறிச் சுற்றுலாக்கள் அவசியம்-ஐ.நா.
செப்.16,2011. பொறுப்பற்ற சுற்றுலாப் பயணங்கள் சமூகங்களுக்குத் தீமைகளைக் கொண்டு வருகின்றன
என்பதால் சுற்றுலாத் தொழிலை நடத்துவோர் தங்கள் தொழில்களில் அறநெறிக் கூறுகளைக் கடைபிடிக்குமாறு
ஐ.நா.அதிகாரிகள் கூறினர். ஒழுக்கநெறியும் சுற்றுலாவும் என்ற தலைப்பில் மத்ரித்தில்
தொடங்கியுள்ள முதல் அனைத்துலக மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய, ஐ.நா.வின் உலக சுற்றுலா
நிறுவனப் பொதுச் செயலர் Taleb Rifai, நன்னெறியைக் கடைபிடிக்கும் மனச்சான்று இன்றி நடத்தப்படும்
உலக சுற்றுலாக்கள் இப்பூமிப் பந்திற்குத் தீங்கை வருவிக்கும் என எச்சரித்தார். இம்மாநாட்டில்
சுற்றுலா அதிகாரிகள், தொழிற்துறை தலைவர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், நன்னெறியியல் வல்லுனர்கள்
என 450 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்