செப்.13,2011. கடாபி போய்விட்டார், லிபியா புதிய தலைமையைப் பெற்றுள்ளது என்று இத்திங்கள்
இரவு லிபியாவின் இடைப்பட்ட அரசின் தலைவரான Mustafa Abdul Jalil கூறினார். லிபியாவின்
தலைநகர் Tripoliயில் சாட்சிகளின் சதுக்கம் (Martyrs Square) என்று புதிதாகப் பெயர் சூட்டப்பட்டுள்ள
திறந்த வெளியரங்கில் இடைப்பட்ட அரசுக்குழுவின் பன்னிரு தலைவர்களுடன் இத்திங்கள் இரவு
மேடையேறிய Jalil இவ்வாறு கூறினார். இப்புதிய அரசுக் குழு அடுத்த 20 மாதங்களில் புதிய
சட்டதிட்டங்களை வகுக்கும் என்றும், லிபியாவை மிதமான இஸ்லாமியக் கொள்கைகளைக் கொண்ட ஒரு
நாடாக உருவாக்குவதே தங்கள் இலக்கு என்றும் Jalil எடுத்துரைத்தார். இதற்கிடையே, லிபியாவின்
முன்னாள் தலைவர் கடாபி இருக்கும் இடம் சரிவரத் தெரியவில்லை என்று உலக நாடுகளின் பல ஊடகங்கள்
கூறி வருகின்றன. மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்களை கடாபிக்கு எதிராகவும், அவருக்கு
விசுவாசமாய் இருக்கும் இராணுவத்திற்கு எதிராகவும் அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு
இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.