2011-09-13 15:06:51

கந்தமால் பகுதியில் தடை செய்யப்பட்டிருந்த கோவில்களை மீண்டும் கட்டுவதற்கு உத்திரவு


செப்.13,2011. ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியைச் சார்ந்த ஓர் உயர் அரசு அதிகாரி அப்பகுதியில் தடை செய்யப்பட்டிருந்த கோவில்களை மீண்டும் கட்டுவதற்கு உத்திரவு அளித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கந்தமால் பகுதியில் நடைபெற்ற வன்முறைகளில் சேதமடைந்த கோவில்களை புதுப்பிப்பதற்கும், புதுக் கோவில்களைக் கட்டுவதற்கும் அப்பகுதியின் இடைநிலை அரசு அதிகாரி ஒருவர் தடை விதித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகளுக்கும் கிறிஸ்தவ பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பயனாக, கந்தமால் மாவட்டத் தலைவர் ராஜேஷ் பிரபாகர் பட்டில் கோவில்கள் மீண்டும் கட்டப்படலாம் என்ற உத்திரவை வழங்கினார்.
2008ம் ஆண்டு இப்பகுதியில் நடைபெற்ற வன்முறைகளில் 230 கோவில்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.