2011-09-12 15:57:49

வீடுகளை இழந்திருக்கும் மக்கள் ஜப்பானில் வரவிருக்கும் குளிர் காலத்தில் சந்திக்க இருக்கும் துயர்கள் குறித்து காரித்தாஸ் கவலை


செப்.12,2011. இதற்கிடையே, ஜப்பானை மீண்டும் கட்டியெழுப்புவதில் முழு மூச்சுடன் உழைத்து வரும் ஜப்பான் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்தந்தை Daisuke Narui, FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில், ஜப்பான் விரைவில் சந்திக்க இருக்கும் குளிர்காலத்தைக் குறித்தும், வீடுகளை இழந்திருக்கும் பல்லாயிரம் மக்கள் கடுமையான இக்குளிர் காலத்தில் சந்திக்க இருக்கும் துயர்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
காவல்துறை வெளியிட்டுள்ள கணக்கின்படி, மார்ச் 11ம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி, ஆகிய பேரிடர்களில் இதுவரை 15,774 பேர் இறந்துள்ளனர், 4,227 பேர் காணாமற் போயுள்ளனர், மற்றும் 410,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். மற்றும் அணுக்கதிர் வீச்சு ஆபத்துக்களால் மேலும் 84,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தகளுக்கு ஆளாகியுள்ளனர்.
இம்மக்களை குளிர்காலத்தின் கொடுமைகளில் இருந்து காப்பது தற்போது காரித்தாஸ் சந்திக்கும் ஓர் அவசரத் தேவை என்றும், இத்தேவைகளில் தங்கள் பணம், உழைப்பு நேரம் அனைத்து வழிகளிலும் உதவி வரும் கிறிஸ்தவர்களின் தாராள மனம் பெரும் பின்பலமாக உள்ளது என்றும் ஜப்பான் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்தந்தை Daisuke Narui கூறினார்.








All the contents on this site are copyrighted ©.