அன்கொனா நகரில் திருநற்கருணை தேசிய மாநாட்டின் இறுதியில் திருத்தந்தையின் மூவேளை செப
உரை
செப்.12,2011. இந்த உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு வன்முறை ஒரு நாளும் தீர்வாகாது
என்பதை உலகத் தலைவர்களும் நல்மனம் கொண்ட அனைவரும் உணர வேண்டும் என்று திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் கேட்டுக் கொண்டார். இத்தாலியின் அன்கொனா நகரில் 25வது திருநற்கருணை தேசிய
மாநாட்டின் இறுதியில் திருப்பலி நிகழ்த்தியபின், அங்கு கூடியிருந்த ஒரு இலட்சத்திற்கும்
மேற்பட்ட மக்களுக்குத் தன் ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கியத் திருத்தந்தை இவ்வாறு கூறினார். 2001ம்
ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரிலும், வாஷிங்டனிலும் நடைபெற்ற விமானத் தாக்குதல்களின்
பத்தாம் ஆண்டு நினைவு கடைபிடிக்கப்பட்டதையொட்டி, சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் திருத்தந்தை
தன் உரையிலும் அமெரிக்க மக்களுக்கு அனுப்பியுள்ள செய்தியிலும் இதுபற்றி குறிப்பிட்டு
வருகிறார்.