2011-09-10 15:18:56

அங்கோனாவுக்குத் திருத்தந்தை பயணம்


செப்.10,2011. இத்தாலியின் தேசிய திருநற்கருணை மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கென இஞ்ஞாயிறன்று Anconaவுக்குச் செல்கிறார் திருத்தந்தை.
“ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்?, அன்றாட வாழ்வுக்கு திருநற்கருணை” என்ற தலைப்பில் இம்மாதம் 3 முதல் 11 வரை இத்தாலியின் 25வது தேசிய திருநற்கருணை மாநாடு Anconaவில் நடைபெறுகின்றது.
இந்தத் திருநற்கருணை மாநாட்டின் தொடக்க நிகழ்வு அன்றே அம்மாநாட்டிற்குத் திருத்தந்தை தனது வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தார். கடந்த ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னரும், இதில் கலந்து கொள்வோருக்குத் தனது செபங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஒவ்வொரு மனிதனுக்கும் அகில உலகுக்கும் வாழ்வு மற்றும் நம்பிக்கையின் ஊற்றாக இருப்பது திருநற்கருணை என்றும் திருத்தந்தை கூறினார்







All the contents on this site are copyrighted ©.