செப்.08,2011. வன்முறைகளை வளர்க்கும் போர்களமாக தேர்தல்கள் மாறக்கூடாது என்று ஆப்ரிக்காவின்
கர்தினால் ஒருவர் கூறினார். செப்டம்பர் 5 இத்திங்களன்று காங்கோ நாட்டில் நடைபெற்ற
தேர்தலைத் தொடர்ந்து, அந்நாட்டின் தலைநகரில் இடம்பெற்ற வன்முறைகளைக் குறித்து ஆழ்ந்த
வேதனை படுவதாக Kinshasa உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Laurent Monsengwo Pasinya
கூறினார். பதிலுக்குப் பதிலளிக்கும் வகையில் நாட்டில் வளர்ந்து வரும் வன்முறைகளால்
நாடு சிக்குண்டிருப்பதால், நாம் சந்திக்க வேண்டிய முக்கியமான பல பிரச்சனைகள் திசை திருப்பப்படுகின்றன
என்று கூறிய கர்தினால் Monsengwo, மக்கள் இவ்வன்முறைகளால் தூண்டப்பட்டு, பழிவாங்கும்
உணர்வில் ஆழ்ந்துவிட வேண்டாமென்று வேண்டுகோள் விடுத்தார்.