2011-09-07 15:03:30

லூர்து அன்னைத் திருத்தலத்தில் அந்தியோக்கு Maronite முதுபெரும் தலைவர்


செப்.07,2011. இவ்வியாழன் கொண்டாடப்படும் மரியன்னையின் பிறந்தநாள் திருவிழாவையொட்டி, அந்தியோக்கு மற்றும் கீழைப் பகுதி Maronite முதுபெரும் தலைவர் Bechara Boutros Rai லூர்து அன்னைத் திருத்தலத்திற்குச் செல்கிறார்.
வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் முதுபெரும் தலைவர் Bechara Boutros Rai லூர்து நகரில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து, மதங்களுக்கிடையே மேற்கொள்ளப்படும் உரையாடல்களைப் பற்றிப் பேசுகிறார்.
லூர்து அன்னையின் திருத்தலம் கீழை ரீதி கிறிஸ்தவர்களைக் கடந்த பல ஆண்டுகளாக ஈர்த்து வருகிறதென்று ZENIT கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறுகிறது.
2006ம் ஆண்டு ஆர்மீனிய கத்தோலிக்க முதுபெரும் தலைவர் இத்திருத்தலத்திற்குச் சென்றார். இவ்வருடத்தின் முதல் நாள் பாக்தாத் நகரில் பேராலயம் தாக்கப்பட்டதில் காயமடைந்தவர்கள் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் இத்திருத்தலத்திற்கு திருப்பயணமாய்ச் சென்றனர் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.