செப்.03, 2011. "ad Limina" என்ற ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும்
சந்திப்பையொட்டி இந்தியாவின் ஆறு ஆயர்களை இச்சனிக்கிழமை காஸ்தெல் கந்தோல்ஃபோ கோடைவிடுமுறை
இல்லத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து
ஜூன் மாதம் வரை இந்தியாவின் 164 மறைமாவட்டங்களின் ஆயர்களை மூன்று குழுவினராகச் சந்தித்தத்
திருத்தந்தை, இந்த செப்டம்பரிலிருந்து கடைசிக் குழுவினரைச் சந்தித்து வருகிறார். இச்சந்திப்பின்
மூன்றாவது நாளான இச்சனிக்கிழமை காலை, பெல்காம் ஆயர் பீட்டர் மச்சாடோ, பெல்லாரி ஆயர் ஹென்ரி
டி சூசா, சிக்மகலூர் ஆயர் அந்தோணிசாமி தாமசப்பா, குல்பார்கா ஆயர் இராபர்ட் மைக்கிள் மிராண்டா,
கார்வார் ஆயர் டெரெக் ஃபெர்ணான்டெஸ், மங்களூர் ஆயர் அலாய்சியஸ் பவுல் டி சூசா ஆகியோரைச்
சந்தித்தார் பாப்பிறை.