2011-09-03 15:03:31

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகள் பற்றி ஆயர்கள் திருத்தந்தையிடம் விளக்கினர்


செப்.03, 2011. இச்சந்திப்பின் போது ஆயர்கள் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகளை திருத்தந்தையிடம் எடுத்துரைத்துள்ளனர்.
இவ்வியாழக்கிழமை திருத்தந்தையைச் சந்தித்த மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ், இச்சந்திப்பு குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
கிறிஸ்தவர்க்கெதிரான நடவடிக்கைகளில் வன்முறை இடம் பெறுகின்றதா என்று திருத்தந்தை கேட்டதாகக் கூறிய, இந்திய ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் கிரேசியஸ், இச்செயல்களில் ஈடுபடும் அடிப்படைவாதிகள் கிறிஸ்தவர்கள் மீது வெறுப்புணர்வை உருவாக்க விரும்புகிறார்கள் என்றார்.
அகில உலகத் திருச்சபையில் இந்திய ஆயர்கள் பேரவை நான்காவது பெரிய பேரவையாகும்.








All the contents on this site are copyrighted ©.