அசன்சோல் மறைமாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆயிரம் பேர் விசுவாசத்தை ஏற்கின்றனர், ஆயர் அறிவிப்பு
செப்.03, 2011. கிழக்கிந்தியாவில் இந்துக்களையும் இசுலாமியரையும் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள
அசன்சோல் மறைமாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் பேர் கிறிஸ்தவத்திற்கு மாறுகின்றனர்
என்று அம்மறைமாவட்ட ஆயர் சிப்ரியான் மோனிஸ் தெரிவித்தார். அசன்சோல் மறைமாவட்டம் உருவாக்கப்பட்ட
1997ம் ஆண்டில் இருந்த கத்தோலிக்கரின் எண்ணிக்கை தற்போது இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும்,
இந்த வளரும் திருச்சபையில் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரம் பேர் வீதம் கத்தோலிக்க விசுவாசத்தைத்
தழுவுகின்றனர் எனவும் கூறினார் ஆயர் மோனிஸ். அருட்பணியாளரின் எண்ணிக்கையும் மூன்று
மடங்காகி தற்போது அவர்களின் எண்ணிக்கை 44 என்றுரைத்த ஆயர், அசன்சோல் மறைமாவட்டத்தில்
தற்போது 29 ஆயிரம் கத்தோலிக்கர் உள்ளனர் என்று கூறினார். மேற்கு வங்க மாநிலத்திலுள்ள
இந்தச் சிறிய மறைமாவட்டத்தின் வளர்ச்சிக்குப் பொதுநிலை விசுவாசிகளின் ஒத்துழைப்பு மிகவும்
அவசியம் என்றும் ஆயர் தெரிவித்தார்.