செப்.02,2011. ஒருகொசுவர்த்திச் சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்குச் சமம் என
புதுடில்லியில் நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கில் டாக்டர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை, இந்திய மருத்து ஆராய்ச்சிமையம்
போன்றவை இணைந்து நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டசெஸ்ட் ரிசர்ச் பவுண்டேசன் இயக்குனர்
சந்தீப் சால்வி இதனை தெரிவித்தார். மேலும் புதுடில்லியை சேர்ந்த பத்ரா மருத்துவமனையை
சேர்ந்த டாக்டர் சஞ்சீவ் பகாய் பேசும் போது இந்தியாவில் ஒலி மாசுகேட்டால் மனித உடல் நலத்திற்கு
விளையும் கேடு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றார். ஒலியால் உருவாகும்
சுற்றுச்சூழல்கேடினால் ஆண்டு தோறும் ஒரு இலட்சம் இந்தியக் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும்,
இதனால் மரபியல் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.