2011-09-01 15:56:06

கிறிஸ்தவர்கள் பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு இன்னும் அதிகச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் - மலேசிய கிறிஸ்தவ அமைப்பு


செப்.01,2011. மலேசியாவில் கிறிஸ்தவர்கள் பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு இன்னும் அதிகச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும், அந்நாட்டின் தேர்தல் முறைகளில் இன்னும் நீதியான வழிகள் கடைபிக்கப்பட வேண்டும் என்றும் மலேசிய கிறிஸ்தவ அமைப்பு செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
இப்புதன், ஆகஸ்ட் 31ம் தேதி மலேசிய சுதந்திர நாள் கொண்டாடப்பட்டதையொட்டி இவ்வறிக்கையை வெளியிட்ட இவ்வமைப்பினர், இந்த ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தல்கள் அனைவருக்கும் சம வாய்ப்புக்கள் வழங்கும் என்ற நம்பிக்கையில் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் கூறியது.
மலேசியாவில் கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளும் பிறரன்புப் பணிகள் ஏழைகளுக்கு மிகவும் பயனளிக்கிறது என்று கூறிய மலேசிய கிறிஸ்தவ அமைப்பின் தலைவரான ஆங்கலிக்கன் ஆயர் Ng Moon Hing, இப்பணிகளுக்கு அரசின் ஆதரவு இருந்தால் இன்னும் சிறப்பான முறையில் பணியாற்ற முடியும் என்று கூறினார்.
கிறிஸ்தவர்கள் ஆற்றும் பிறரன்புப் பணிகளை மதமாற்றும் பணிகள் என்று ஊடகங்கள் தவறாகக் கூறிவருவதைச் சுட்டிக்காட்டிய ஆங்கலிக்கன் ஆயர், மதம் குலம் ஆகிய பிரிவுகள் ஏதுமின்றி அனைத்து ஏழைகளும் இப்பணிகளால் பயனடைகின்றனர் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.