2011-08-30 14:49:11

கொலம்பியத் திருச்சபையின் அமைதி வாரம்


ஆக 30, 2011. 'மனித மாண்பு காக்கப்படுதல் மற்றும் அமைதிக்கான அர்ப்பணத்திற்கான அழைப்பு' என்பதை மையக் கருத்தாகக் கொண்டு கொலம்பியாவில் செப்டம்பர் மாதம் 4 முதல் 11 வரை தலத்திருச்சபையில் அமைதி வாரம் சிறப்பிக்கப்படுகின்றது.
அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டியதன் தேவை குறித்து வலியுறுத்தும் இக்கொண்டாட்டங்கள், உள்நாட்டு மோதல்களுக்கு அரசியல் தீர்வு காண்பதையும், மக்களிடையே ஒப்புரவை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இவ்வாண்டின் அமைதி வாரச் சிறப்புக் கொண்டாட்டங்களுக்கு மறை மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள கல்வி நிறுவனங்கள், பங்குத்தளங்கள், மற்றும் குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள தலத்திருச்சபைத் தலைவர்கள்,தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் இதில் பங்குபெற அழைப்பை முன்வைத்துள்ளனர்.
ஏழைகளின் வாழ்வு மேம்பாட்டிற்கெனத் தன்னை அர்ப்பணித்து உழைத்த புனித பீட்டர் கிளாவரின் திருவிழா செப்டம்பர் 9ம் தேதி இடம்பெறுவதையொட்டி, கொலம்பியத் திருச்சபையால் அவ்வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.