ஆக.26,2011. “40 Days for Life” என்ற வாழ்வுக்கு ஆதரவான குழு ஒன்று, உலக அளவில் 300க்கும்
மேற்பட்ட இடங்களில் வாழ்வுக்கு ஆதரவான நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. வருகிற
செப்டம்பர் 28 முதல் நவம்பர் 6 வரை அமெரிக்க ஐக்கிய நாட்டில் 48 மாநிலங்கள், கானடாவில்
ஏழு பகுதிகள், இன்னும், ஆஸ்திரேலியா, இஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா ஆகிய நாடுகளிலும்
இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கருக்கலைப்பு நடத்தப்படும் இடங்களுக்கு முன்னர் உண்ணா
நோன்பு, செபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இந்த நாற்பது நாட்களும் நடைபெறும். அமெரிக்க
ஐக்கிய நாட்டு டெக்சஸ் மாநிலத்தின் Bryan ல், Carney, அவரது மனைவி மற்றும் அவரது நண்பர்களால்
2004ல் தொடங்கப்பட்ட “வாழ்வுக்கு ஆதரவான 40 நாள்” என்ற நடவடிக்கையில் கடந்த ஆண்டில் மட்டும்
நான்கு இலட்சத்துக்கு அதிகமானோர் கலந்து கொண்டு செபம் செய்து உண்ணா நோன்பு கடைபிடித்தனர்.