அமெரிக்காவின் முதல் மறைமாவட்டத்திற்குப் “புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி” தேவைப்படுகின்றது
ஆக.26,2011. அமெரிக்காவில் முதல் மறைமாவட்டம் தொடங்கி ஐந்நூறு ஆண்டுகள் ஆகியுள்ள இவ்வேளையில்
அக்கண்டத்திற்குப் “புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி” தேவைப்படுகின்றது என்று திருத்தந்தையின்
பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். கரீபியன் நாடாகிய தொமினிக்கன் குடியரசின் தலைநகர்
Santo Domingo மறைமாவட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் 500ம் ஆண்டையொட்டி நடைபெற்ற கொண்டாட்டங்களில்
திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட கர்தினால் Carlos Amigo Vallejo இவ்வாறு
கூறினார். இம்மாதம் 7,8 தேதிகளில் நடைபெற்ற இந்த ஜூபிலி கொண்டாட்டங்களில் உறையாற்றிய
கர்தினால் Amigo, இம்மறைமாவட்டத்திற்குப் “புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி” தேவைப்படுகின்றது
என்றார். கடவுள், மக்களின் வரலாற்றிலும் அவர்களின் கலாச்சாரத்திலும் நற்செய்தியை
அறிவிக்க விரும்பினார், வரலாறானது விசுவாசத்திலிருந்து அறியப்பட வேண்டும் என்றும் கர்தினால்
கூறினார்.