வேளாங்கண்ணி கோவில் ஆண்டு பெருவிழா: அனைத்து ஏற்பாடும் தயார்
ஆக.25,2011. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி
கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதற்காக பக்தர்களுக்கு தேவையான அனைத்து
வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பசிலிக்காப் பேராலய
அதிபர் அருள்தந்தை மைக்கிள் தெரிவித்துள்ளார். இப்பெருவிழாவையொட்டி பத்திரிக்கையாளர்களுக்குப்
பேட்டியளித்த அருள்தந்தை மைக்கிள் மேலும் பல விவரங்களை வெளியிட்டார். வேளாங்கண்ணியில்
பக்தர்களின் தேவைக்கு 24 மணி நேரமும், குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. திருட்டு
மற்றும் குற்ற செயல்களைத் தடுக்க ஆங்காகே சுழல் கேமராக்கள் மாவட்ட போலீஸ் சார்பில் பொறுத்தப்பட்டுள்ளன.
விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குறைந்த விலையில் தரமான உணவு
கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை பேராலய அதிபர் அருள்தந்தை மைக்கிள்
தெரிவித்தார்.