2011-08-25 14:54:46

உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் இயேசு சபையினரின் வழி நடத்துதலில் கலந்து கொண்ட 3000 இளையோர்


ஆக.25,2011. அண்மையில் ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் நிறைவுபெற்ற அகில உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் இயேசு சபையினரின் வழி நடத்துதலில் 3000 இளையோர் கலந்து கொண்டனர்.
Magis என்ற பெயர் கொண்ட இவ்விளையோர் குழு, இயேசு சபையைத் தோற்றுவித்த புனித இஞ்ஞாசியார் ஸ்பெயின் நாட்டில் பிறந்த Loyola கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தங்கள் திருப்பயனத்தைத் துவக்கி, மத்ரித் நகரில் முடித்தனர்.
இந்தியாவிலிருந்து 52 இளையோரை வழிநடத்திய இயேசு சபை குரு Erwin Lazardo, இந்த அனுபவம் நாம் அனைவரும் இவ்வுலகில் பயணிகள் என்பதை உணர வைத்ததென்றும், இம்முயற்சியில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் தங்கள் விசுவாசத்தில் ஆழப்பட்டனர் என்றும் கூறினார்.
தான் அழைத்து வந்த இளையோரில் பலர் இந்திய கிராமங்களில் இருந்து வந்தவர்கள் என்றும், இவர்களில் பலர் விமானத்தில் மேற்கொண்ட முதல் பயணம், மற்றும் பிற நாடுகளின் கலாச்சாரம் ஆகியவை ஆழ்ந்த அனுபவங்களாக இருந்தன என்றும் அருள்தந்தை Lazardo மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.