Anna Hazareயின் தலைமையில் நடைபெற்றுவரும் போராட்டத்தைக் குறித்து ஆழமாகச் சிந்திக்க
வேண்டும் - இந்தியத் திருச்சபை
ஆக.23,2011. தற்போது இந்தியாவில் Anna Hazareயின் தலைமையில் நடைபெற்றுவரும் ஊழல் ஒழிப்பு
உண்ணாநோன்பு போராட்டம் பல்லாயிரம் மக்களை ஈர்த்து வரும் அதே வேளையில், இந்தியத் திருச்சபை
இந்தப் போராட்டத்தைக் குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
பல்வேறு
கிறிஸ்தவ மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகள் இந்தப் போராட்டத்தின் விளைவாக ஏற்படக்கூடிய நன்மைகள்
குறித்து அறிக்கைகள் வெளியிட்டு வரும் வேளையில், இந்தியத் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இந்தப்
போராட்டத்திற்கு ஆதரவு தாராமல் விலகி நிற்கிறது.
பாராளுமன்றம் மேற்கொண்டுள்ள
மக்களாட்சி முயற்சிகளைக் கருத்தில் கொள்ளாமல், அவற்றைப் புறந்தள்ளிவிட்டு Anna Hazare
மேற்கொண்டுள்ள முயற்சிகள் மக்களாட்சிக்கு சரியான வழியாக அமையாது என்று ஆயர் பேரவை தன்
கருத்தை வெளியிட்டுள்ளது.
Anna Hazare தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தைக்
குறித்து பல்வேறு அரசியல் ஆய்வாளர்களும், சமுதாய ஆர்வலர்களும் தங்கள் கவலைகளையும், எதிர்ப்பையும்
ஊடகங்கள் வழியே வெளியிட்டு வருகின்றனர்.